நுவரெலியா நாவலப்பிட்டி கலபொட தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில்……(காணொளி)

447 0

நுவரெலியா நாவலப்பிட்டி கலபொட தோட்ட மக்கள், தோட்ட அதிகாரியின் செயற்பாட்டை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது 150 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்டத்தின் பழைய தொழிற்சாலைக்கு முன்பாக, பதாதைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட அதிகாரி ஒருவர் தொழிலாளி ஒருவரை தாக்கியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த தோட்ட அதிகாரி குடியிருக்கும் விடுதி வளாகத்தில், அப்பகுதியில் இருந்து வந்த கால்நடை ஒன்று, புற்களை உட்கொள்ளும் போது, தோட்ட அதிகாரி அதனை கண்டு, குறித்த கால்நடையை தனது விடுதிக்கு அருகில் கட்டி வைக்குமாறு தொழிலாளி ஒருவரிடம் பணித்துள்ளார்.
இந்நிலையில் கால்நடையை விடுதிக்கு முன்னால் கட்டி வைத்திருந்த போது, கால்நடையின் உரிமையாளர் தோட்ட அதிகாரிக்கோ, கால்நடையை கட்டி வைத்த தொழிலாளிக்கோ அறிவிக்காமல் கொண்டு சென்றுள்ளார்.
இதனை அவதானித்த தோட்ட அதிகாரி, தன்னை தாக்கியதாக கால்நடையின் உரிமையாளர் நாவலப்பிட்டி பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளார்.
அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான கால்நடையின் உரிமையாளர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் தோட்ட அதிகாரியின் செயற்பாட்டை கண்டித்தும், அவரை பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக கைது செய்ய கோரியும், சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a comment