இம்முறை உயர்தரப்பரீட்சையின் இரசாயனவியல் பரீட்சை வினாத்தாள்களை ஒத்த மாதிரி வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய டியூசன் ஆசிரியரின் தந்தை மற்றும் சகோதரன் உட்பட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

