நிதியமைச்சின் சுற்றிவளைப்புப் பிரிவினால் 9000கோடி வருமானம்

327 0

680x-1சிறீலங்காவின் நிதியமைச்சின் சுற்றிவளைப்புப் பிரிவின் நடவடிக்கையினால் 45 நாட்களுக்குள் 9ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட சுற்றிவளைப்புப் பிரிவை உருவாக்கினார்.

இதனடிப்படையில், விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரின் சுற்றிவளைப்பின்போது 7000 கோடி பெறுமதியான கொக்கெயின் போதைப்பொருளும், சட்டவிரோத தொலைபேசி மற்றும் வாகனக்கொள்வனவு போன்றவற்றின்மூலம் 2000 ஆயிரம் கோடியும் அரசின் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 45 நாட்களாக தொடர்ந்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவு எதிர்வரும் நாட்களிலும் நாட்டிற்கு பலன் தர கூடியதும் கடத்தல்களை தடுப்பதற்கும் செயற்படுவார்கள் எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.