தேக்கு மரங்களை வெட்டிய நால்வர் கைது!

258 0

வெல்லவாய, ஆனபல்லம பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் தேக்கு மரங்களை வெட்டிய 04 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புத்தள பொலிஸ் விஷேட படைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படும் போது தேக்கு மரங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் மரக் குற்றிகள் எனபன பொலிஸ் விஷேட படைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக வனப் பாதுகாப்பு அலுவலத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட படைப் பிரிவு கூறியுள்ளது.

Leave a comment