சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது

393 0

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பெற்றோசோ டெவன் போல் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 06 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இன்று சனிகிழமை அதிகாலை 01.30 மணி அளவில் இவர்களை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய தலைமையில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 06பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட 06 பேரும் பெற்றோசோ தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 06 பேருக்கும் இன்றைய தினம் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி கே.சி.தர்மபிரியவினால் பிணை வழங்கப்பட்டு, எதிர்வரும் 22.08.2017 அன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a comment