அரச பொருட்களை கொள்ளையிட்ட நபர் கைது

204 0

8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கெக்கிராவை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொள்ளையடித்த பொருட்களின் ஒரு பகுதியை முச்சக்கர வண்டியில் கொண்டுசெல்லும் போது கெக்கிராவை பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹபரன பலுகஸ்வாவ பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே குறித்த கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதோடு பாடசாலைகள் மற்றும் விஹாரைகளிலிருந்தே குறித்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட பொருட்களில் தொலைக்காட்சிகள், DVD உபகரணங்கள், நீர்பம்பிகள், சூரிய சக்தி மின்கலங்கள் என்பன அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment