அத்திடிய கொள்ளை சம்பவம் – சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் தகவல்

180 0

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்திடிய பகுதியில் தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக பாதாள உலக கோஷ்டியின் தலைவர் கொஸ்கொட சமந்தவாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கொட நாதொட்ட பிரதேசத்தை சேர்ந்த தர்ம கீர்த்தி பெரேரா எனப்படும் கொஸ்கொட தாரக எனப்படும் நபரே சந்தேகிப்படும் நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, CCTV காணொளிகள் மூலம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் கொஸ்கொட தாரக தொடர்பில் தகவல் தெரிந்தால் 0718591661, 0718591664, 0718591668, என்ற தமது எண்ணிற்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்திடிய தனியார் வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அங்குள்ள பாதுகாவலர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு சுமார் 14 இலட்சம் ரூபாவினை கொள்ளையிட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தில் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment