வறட்சியால் விவசாயம் பாதிப்பு!

204 0

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்து குறைவடைந்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது நீரின் அளவு நூற்றுக்கு 14 சதவீதமே காணப்படுவதாக அந்த திணைக்களத்தின் நீர் முகாமையாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதனால் விவசாயத்திற்கு நீரை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சி காலநிலை, அடுத்த மாதம் அளவில் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment