புலமை பரிசில் பரீட்சை மையங்களுக்கு அனுமதியின்றி நுழைதல் தடை

238 0

5ம் தர புலமைபரிசில் பரீட்சை இடம்பெறும் பரீட்சை மையங்கள் அமைந்துள்ள பாடசாலைகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு , பாடசாலை ஊழியர்களுக்கு மற்றும் அனுமதியற்ற நபர்களுக்கு பாடசாலையினுள் பிரவேசித்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் உள்ள 3014 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ளது.

அதன்படி , குறித்த காலப்பகுதியினுள் அனுமதியின்றி எந்த நபரும் புலமை பரிசில் பரீட்சை இடம்பெறும் பாடசாலைக்கு பிரவேசித்தல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் , குறித்த பாடசாலைகளின் அதிபர் அலுவலகமும் மூடப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment