முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இலங்கை சுதந்திர கட்சியை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் , அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி – ஹக்மீமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
புதிய கட்சியொன்றை உருவாக்குவதை விடுத்து கட்சியினுள் இருந்து 2020 ஆம் ஆண்டளவில் இலங்கை சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை அமைக்க உழைக்க வேண்டும் என அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.