கடல் எல்லையைத் தாண்டிய குற்றச்சாட்டில் மேலும் 2 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறையில் இருந்து 13 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில், சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் இழுவைப்படகும் ஏனைய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

