நெருக்கடி காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது – ஜனாதிபதி

310 0

maithiripala-55445d1ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கும், நாட்டில் ஏற்பட்டிருந்த நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாத சூழ்நிலையிலேயே 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுந்திரகட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஆட்சியில் அழகான அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட போதும் அந்த அபிவிருந்திக்குள்ளாக மேற்றகொள்ளப்பட்ட அழகற்ற நடவடிக்கையால் 9 லட்சம் கோடி ரூபாய்களை மக்கள் இன்று கடனாக சுமந்துக்கொண்டிருக்கிறார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.