பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை – ஒருவர் சுட்டுக்கொலை

307 0

shootingகனடாவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது காவல்துறையினரால், சந்தேகநபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள கனேடிய சிறப்பு காவல்துறையினர், தனி ஒருவருக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

டொரன்டோவின் தென்மேற்கு 225 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பிரதேசத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம், கடந்த வருடம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு திறந்தநிலையில் ஆதரவு வழங்கியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 24 வயதான ஆரோன் ட்ரைவர் என்பவரே இந்த சந்தேக நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பொதுஇடம் ஒன்றில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக கனேடிய காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.