லசந்த கொலை – இராணுவப்புலனாய்வு உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு

316 0

lasantha21ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவப்புலனாய்வு உறுப்பினரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை நீதிமன்றம் இந்த காலநீடிப்புக்கு உத்தரவிட்டது.
2009 ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று லசந்த விக்கிரமதுங்க ரத்மலானை அத்திட்டிய பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் குற்றவாளிகள், கண்டயறிப்படாத நிலையில் அண்மையிலேயே இராணுவப்புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் கைதுசெய்யப்பட்டார்.
இவரே, கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் வாகன சாரதியை கடத்திச்சென்றவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.