ஆட்கடத்தல் குற்றத்துக்காக ஒருவருக்கு கடூழிய சிறை தண்டனை

296 0

Vavuniya-Courtவவுனியா செட்டிகுளத்தில் லெட்சுமணன் குலராசா என்பவரைக் கடத்திச் சென்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்தக் கடத்தல் சம்பவம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்த ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராக  கடந்த 2013 ஆம் ஆண்டு சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின்போது, இரண்டாம் எதிரி மீதான குற்றச்சாட்டிற்கான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இந்தநிலையில்  முதலாவது எதிரிக்கு 20 வருடம் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்தார்.