அனுமதியின்றி தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்தவர்கள் கைது

401 0

கிழக்கு மாகாணத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக கூறப்படும் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக, கிழக்கு மாகாணத்தில் மருதமுனை அருகேயுள்ள நிந்தவூர் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் உரிய ஆவணங்களின்றி ரகசியமாக தங்கியுள்ளதாக கடலோர பொலிஸ் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடந்த நேற்று சிறப்பு பொலிஸ் படையினருடன் அந்த பகுதியை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது அங்குள்ள ஒரு வயல்வௌியில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர்களை பொலிஸார் கைது செய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

எல்லை கடந்து வந்து உரிய அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்ததாக அவர்கள் மூன்று பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான மூவரும் 27, 36, 41 வயதுடையவர்கள் என விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை.

Leave a comment