மின்சார தொடருந்து சேவையினை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்பகட்டமாக தற்போது இதற்கான கேள்விப்பத்திரங்களை சமர்ப்பிக்க ஆறு நாடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹல் சோமவீர தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச திட்டத்திற்காக 60 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் உஎன தெரிவிக்கப்படுகின்றது.
158 கிலோமீற்றர்களை கொண்ட பானந்துரை பொல்கஹவலை, கோட்டை நீர்கொழும்பு களனிவெளி தொடருந்து பாதைகளில் இந்த மின்சார தொடருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.