இலங்கையில் அடைக்கலம் கோரிய வெளிநாட்டுக் குழு

242 0

சிரியாவை சேர்ந்த குழு ஒன்று இலங்கையில் அரசியல் அடைக்களம் கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய இவர்களில் ஆறு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை அகதி அந்தஸ்து கோரியுள்ளவர்களின் எண்ணிக்கை 312 ஆக உயர்;ந்துள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, அகதி அந்தஸ்து கோரியுள்ள சிரிய மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாதென குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம் ரணசிங்க தெரிவித்தார்.

 

Leave a comment