அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு!

272 0

மதவாச்சி – தம்பலகொல்லேவ பகுதியில் ஆற்றின் அணைக்கட்டு ஒன்றில் இருந்து கொலை செய்யப்பட்டுள்ள நபரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வந்த தகவலையடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்துள்ள நபரின் கழுத்து பகுதியில் பல காயங்கள் காணப்படுவதாக காவற்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Leave a comment