நாட்டின் பல பாகங்களில் மழை பெய்த போதும் போதுமான மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என மின்சக்தி மற்றும் மாற்று சக்திவலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மின்சார உற்பத்திற்கு போதுமான நீர் மட்டம் நீர்த்தேங்கங்களில் இல்லை என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து செல்வதாக அவர் குறிப்பிட்டார்.