வறட்சியான காலநிலை – 12 லட்சம் பேர் பாதிப்பு

330 0

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறச்சி காலநிலையால் குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரண்ட காலநிலையால் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

Leave a comment