சிறிதரனின் கேள்விக்கு பதிலளித்த ரணில்!

189 0

பயங்கரவாத செயல்களால் வடக்கில் சேதமடைந்த வியாபார ஸ்தலங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றை நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத செயல்களால் வடக்கில் சேதமடைந்த வியாபார ஸ்தலங்களுக்காக இழப்பீடு வழங்கப்படும். வாழ்வாதார அபிவிருத்திக்காக கடன் திட்டமும் அமுலாகும் என உறுதியளித்துள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் அரச சொத்துக்களின் உச்ச பயனை பெறுவது அரசாங்கத்தின் நோக்கமெனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், சமகால அரசாங்கம் பதவியேற்ற நாள் தொடக்கம் வடக்கில் உட்கட்டமைப்பு வசதிகளையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

Leave a comment