இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு

15432 0

கம்பஹா, – ரத்துபஸ்வலயில் சுத்தமான குடிதண்ணீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவ அணியினருக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் அனுர தேசப்பிரிய உட்பட சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் காலம் நீடிக்கப்படுவதாக கம்பஹா நீதிவான் உத்தரவிட்டார்.

பிரிகேடியர் தேசப்பிரிய, இராணுவ சார்ஜன்ட் டிங்கிரி அருணகே சிறிசேன, சார்ஜன்ட் லலித் கேர, கோப்ரல் ஜயசுந்தர முதியன்சலாகே திலகரட்ன ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரிய பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment