கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

229 0

கிழக்கு மாகாண பட்டதாரிகளை சேவைக்கு உள்ளீர்க்கும் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கோரப்பட்டிருக்கும் வெற்றிடங்களுக்கு 45 வயதான பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர்.

முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் கிழக்கில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக ஆயிரத்து 700 பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment