கடற்படையினரின் படகில் இந்திய மீனவர்களின் படகு மோதல்!

220 0

கடற்படையினரின் படகில் மோதி கடலில் வீழ்ந்த இரு இந்திய மீனவர்களில் ஒருவர் 12 மணிநேரமும் மற்றொருவர் 4 மணிநேரமும் நீந்தி நயினாதீவுக் கரைசேர்ந்து உயிர் தப்பினார்கள்.

இந்திய புதுக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் மற்றும் செல்வமுருகன் ஆகிய இருவர் உட்பட ஐவர் பயணித்த படகுமீது கடறபடையின் டோறா மோதியதில் இருவர் கடலில் வீழ்ந்துள்ளனர். அவ்வாறு வீழ்ந்தவர்களும் படகில் பயணித்த ஏனையோரும் தாம் குரல் எழுப்பியபோதும் கடற்படையினர் தம்மைக் காப்பாற்றாது கடற்படையினர் அங்கிருந்து அகற்று சென்ற நிலையில் படகி்ல் இருந்த மூவரும் கடலில் நீண்ட நேரம் ஏனைய இருவரையும் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

அவ்வாறு படகில் இருந்தவர்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்த சமயம் கடலில் வீழ்ந்த 21 மற்றும் 25 வயது இளைஞர்கள் கடலில் கரையைநோக்கி நீந்தியுள்ளனர். அவ்வாறு நீந்தியவர்களில் ஒருவர் சுமார் 4 மணிநேரம் நீந்தி நயினாதீவுக் கரையை அடைந்துள்ளபோதும் மற்றைய இளைஞன் 12 மணிநேரம் நீந்திய நிலையில் உள்ளூர் மீனவர்களின் படகில் உதவிகோரி கரை சேர்ந்த நிலையில் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இவர்கள் இருவரையும் தேடிய படகு சக மீனவர்களைக் காணாது அதிகாலைவரையில் தேடுதல் மேற்கொண்ட பின்பு படகினை இலங்கை கரையை நோக்கி திருப்பி இலங்கை கடற்படையிடமே வந்ததாக ஏனைய மூவரும் தெரிவித்தனர்.

Leave a comment