இந்நாட்டு தேயிலை தொழிற்துறையை மேம்படுத்த முதலீட்டாளர்கள் முன்வராவிட்டால் வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சர்வதேச தேயிலை சம்மேளனத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.