மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

236 0

மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரை பகுதியில் 41வயதுடைய ஆணொருவரின் சடலம் இன்று (09) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

தேற்றாத்தீவு கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 41 வயதுடைய சுப்பிரமணியம் குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வெளிநாட்டு மற்றும் விமான பிரையாணசீட்டு முகவர் நிலையம் நடாத்தி வருபவர். இவர் சம்பவதினமான இன்று காலை வீட்டில் தான் தற்கொலை செய்யப் போவதாக கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு வீட்டில் மனைவி பிள்ளைகளுக்கு தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் மேசையில் கடிதம் ஒன்று இருப்பதை கண்டு அதனை வாசித்த பின் அவரின் தொலைபேசிக்கு முயற்சித்தபோதும் அது இயங்கவில்லை. இதனையடுத்து இவரை தேடி மனைவி கடைக்குச் சென்றபோது அவர் அங்கு வரவில்லை என தெரியவந்துள்ளதுடன், அவரை தேடிய நிலையில் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் அருகில் கையடக்க தொலைபேசி மற்றும் அவரின் பேர்ஸ் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment