பருத்திதுறை, மணற்காடு பகுதிகளில் மணல் அகழ்வு – 9 பேர் கைது 

283 0

யாழ்ப்பாணம் – பருத்திதுறை மற்றும் மணற்காடு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றி கடத்திச் செல்ல தயாராவதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களும் மீட்கப்பட்ட உழவு வண்டியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை காவற்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment