நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு பெண்கள் கடத்தல் – வெளியானது புதிய தகவல்

338 0

நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு பெண்கள் கடத்தல் – வெளியானது புதிய தகவல்

நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு பெண்கள் கடத்தப்படுகின்றமையின் பின்னணியில், அந்த நாட்டின் குடிவரவுத்துறை அதிகாரிகள் செயற்பட்டுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நேபாள நடாளுமன்றத்தின் விசாரணை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தற்காரர்களால் பல நேபாளப் பெண்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதுடன், இலங்கை ஊடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலைமையும் அதிகரித்திருந்தது.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த கடத்தல்களுக்கு அந்த நாட்டின் விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக செயற்பட்டுவந்துள்ளமை உறுதியாகி இருக்கிறது.

Leave a comment