புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை

229 0

எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதி நள்ளிரவு முதல் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 20ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை முடிவடையும் வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல், மாதிரி வினாத்தாள்களை வழங்குவதாக பதாகைகள் ஒட்டுவது, துண்டுப் பிசுரங்களை விநியோகித்தல், பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துடனோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறியுள்ளார்.

Leave a comment