திட்டமிடப்பட்ட கூட்டு குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக தனியான பிரிவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.கண்டியில், மல்வத்த பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இறுதி ரந்தொலி பெரஹராவிற்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

