கிண்ணியாவில் 37 லீற்றர் கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது

218 0

திருகோணமலையில் நேற்று (06) மாலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிண்ணியா-3 பிரதேசத்தில் தமது தற்காலிக வசிப்பிடத்தில் இருந்து 37 லீற்றர் 750 மில்லிலீற்றர் கசிப்புடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை திருகோணமலை பிராந்தி போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைதுசெய்தனர்.

திருகோணமலை கன்னியா பிரதேசத்தை பிறப்பிடமாகவும் கிண்ணியா பாரதிபுரத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைக்களுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Leave a comment