அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில்

353 0

கடந்த 4ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோவுக்கான அதிகபட்ச சில்லறை விலை 90 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசிக்கு 75 ரூபாவாகவும் சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விலைகளுக்கு அதிகமாக அரிசியை விற்க வேண்டாம் எனவும், விலையை காட்சிப்படுத்தாதிருக்க வேண்டாம் எனவும் குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment