நைஜீரியாவில் தேவாலயத்திற்குள் நுழைந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 12 பேர் பலி

206 0
நைஜீரியாவில் தேவாலயத்திற்குள் நுழைந்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர்.
நைஜீரியா நாட்டின் ஒனிட்ஷா நகரின் அருகில் ஒழுபுலுவில் உள்ள செயின்ட் பிலிப் கத்தோலிக்க தேவாலயத்தில் நூற்றுக்கும் அதிகமமானவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது தேவாலயத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஐந்து தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Leave a comment