கேமரூனில் தற்கொலை தாக்குதல் – 7 பேர் பலி

202 0

கேமரூனில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

கேமரூன் மற்றும் நைஜீரிய நாட்டின் எல்லைப்பகுதியில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அவர்களை ஒடுக்குவதற்கான போரில் பன்னாட்டு ராணுவ வீரர்கள் அடங்கிய படை ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கேமரூன் நாட்டின் வடக்கு பகுதியில் நைஜீரிய எல்லையை ஒட்டி உள்ள சந்தை நகரமான அம்சைடில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
தீவிரவாதி ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், வடக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகளே, இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a comment