சுதந்திர கட்சி தனியே ஆட்சி அமைக்க முடியும் – அமைச்சர் தயாசிறி

237 0
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனியே ஆட்சி அமைக்க  மேலும் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 11 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியுடன் இணைய தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
வெலிகத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கள் தரப்பிலுள்ள 95 பேரும் ஒன்றிணைந்தால் தமக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
95 பேருடன் மேலும் 17 பேர் இணைய வேண்டியுள்ளது.
அந்த பதினேழு பேரையும் இணைக்க ஜனாதிபதியினால் முடியும்.
இந்த நிலையில் தற்போது பதினொரு பேர் தம்முடன் இணைய தயாராக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment