அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு – சுசில்

292 0

74227_susil-premajayanth-04-1ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குருணாகலையில் நடைபெறவுள்ள சுதந்திர கட்சியின் 65வது வருடபூர்த்தி நிகழ்வுக்கு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலருக்கும் இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.