சு.க தலைமையகத்தில் கூச்சலிட்டவர்களை மஹிந்த அறிவார் –டிலான்

257 0

MR-Dilanமஹிந்த தரப்பு பேரணியில் பங்கேற்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக கூச்சலிட்டவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ஷ அடையாளம் கண்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடந்த நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

எந்த வகையிலும் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலேயே அவருக்கு எதிரான பல சூழ்ச்சியாளர்கள் இருந்தார்கள் என்பது தற்போது அவருக்கு புரிந்திருக்கும்.

பாதயாத்திரையின் போது கட்சியின் தலைமையத்துக்கு முன்பாக கூச்சலிட்ட விடயம் தொடர்பில் அவர் கவலையுடனேயே இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் டிலான்பெரேரா குறிப்பிட்டுள்ளார்.