உத்தர்காண்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

340 0

chn_tharunஇந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தின் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் இந்தியாவின் சுதந்திர தினம் வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இந்த மாநிலத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கவில்லை.

எனினும் கடந்த சில மாதங்களாக அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.