116 கிலோ வல்லப்பட்டைகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சித்த நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு கட்டுநாயக்க வானூர்தி நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
21, 35, 45 மற்றும் 60 வயதுடைய நான்கு பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகளின் பெறுமதி 120 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து மும்பை சென்று அங்கிருந்து டுபாய் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களுக்கு தலா 7 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.