கோப்பாய் தாக்குதல் – மேலும் ஒருவர் கைது

351 0

யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகத்துக்குரியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உந்துருளியுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் திகதி கோப்பாய் காவல்துறையினர் மீது கொக்குவில் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் விசேட அதிரடிப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக பருத்திதுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a comment