விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் காரைக்காலை சென்றடைந்தனர்

320 0

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் காரைக்கால் வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கடற்படையால் கடந்த இரண்டு மாதங்களில் 93 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இதில் 77 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் கப்பல் மூலம் நேற்று காலை புறப்பட்ட மீனவர்கள், நடுக்கடலில் வைத்து இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின் இந்திய ரோந்து கப்பல் மூலம் அனைவரும் காரைக்கால் வந்ததுடன், அவர்களை அமைச்சர் ஜெயக்குமார், வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a comment