அரச நிறுவனங்களை தனியார் துறையினருக்கு கொடுக்கும் எண்ணமில்லை – ஜனாதிபதி

330 0

09-e1436888118374-1024x648லாபம் உழைக்கின்ற அரச நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பனை செய்யும் எண்ணம் தமக்கில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக இறங்குதுறை ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகம் சிறந்த லாபத்தை ஈட்டும் நிறுவனமாகும்.
ஆனால் அதன் லாபம் முழுவதும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான கடனை திரும்ப செலுத்த பயன்படுத்தப்படுகின்றது.
இதனால் துறைமுகத்திற்கும் துறைமுக ஊழியர்களுக்கும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
அதேநேரம் லாபம் ஈட்டும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சில ஊடகங்கள் குற்றம் சுமத்துகின்றன.
எனினும் அவ்வாறான எந்த தீர்மானத்தை தாம் ஆதரிக்க போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.