சிறுநீர் வர்த்தகம் – கைதானவர் தப்பி ஓட்டம்

329 0

201506110016214864_From-prisoninvestigation-prisonerEscaped_SECVPF.gifஇந்தியர்களை மையப்படுத்தி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக தொகுதி வர்த்தகம் தொடர்பில் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் சந்தோஸ் ராவுத் தப்பிச் சென்றுள்ளார்.

டில்லியிலிருந்து குஜராத் சென்ற சொர்ணஜெயந்தி கடுகதி தொடரூந்தில் காவற்துறையினரால் அழைத்து சென்ற போது அவர் தப்பிச் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் அச்மர் தொடரூந்து நிலையத்தில் இறங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அந்த பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வைத்தியர் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.