படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது – பொன் ராதாகிருஷ்ணன்

309 0

201607090941378596_Pon-Radhakrishnan-interview-action-to-recover-boats-of-TN_SECVPF.gifஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 100க்கும் அதிகமான தமிழக மீனவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கைதாகின்ற தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுகின்ற போதும் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.

இந்தநிலையில், இலங்கையின் மீன்பிடிதுறை அமைச்சர் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ள நிலையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.