கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடி குறித்து ஆராயாமல் இருப்பது பிரச்சினைக்குரியது – அமைச்சர் விஜித் 

179 0

கடந்த அரசாங்கத்தினால் இடம்பெற்ற ஊழல், மோசடி குறித்து ஆராயாமல் இருப்பது பிரச்சினைக்குரியது என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் ஊழல் குறித்து ஆராயப்படாமல் இருப்பது தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் தவறாகும்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறுகின்ற ஊழல் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் விசாரணை நடத்துகிறது.

வரலாற்றில் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருக்கிறார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றையதினம் பிணை முறி விநியோக மோசடி குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கினார்.

இவ்வாறான விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

அதேநேரம் முன்னைய அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment