இலஞ்சம் பெற முற்பட்ட கான்ஸ்டபில் கைது

247 0

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பெல்மடுலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கான்ஸ்டபில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் 6000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முற்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி விபத்தொன்றின் போது, சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்கவே அவர் இவ்வாறு இலஞ்சம் பெற முற்பட்டதாக, பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment