அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் விக்னேஸ்வரன் உறுதியளிப்பு!

283 0
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் தாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று வட மாகாண முதலமைச்சரை சந்தித்தனர்.
இதன்போது முதலமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்காலத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்படும் பட்சத்தில் தமது குடும்பங்கள் இழந்த இழப்பீடுகளை வழங்க முடியுமா என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வினவியுள்ளனர்.

Leave a comment