டெங்கு நோயை கட்டுப்படுத்த நாளை முதல் மற்றுமொரு வேலைத்திட்டம்

223 0
டெங்கு நோய் அதிகளவில் பரவி வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டுச் சூழல்கள் சோதனையிடப்பட்டு, பல வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் நாளைய தினம் முதல் மீண்டும் இவ்வாறான டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment