ஆட்சிக்கு வருவதற்காக திருமாவளவனிடம், மு.க.ஸ்டாலின் மண்டியிடுவதா?: தமிழிசை

391 0

ஆட்சிக் கனவை நிறைவேற்றவே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவனிடம் மண்டியிட்டுள்ளார் என்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் விமர்சித்துள்ளார்.

ஆட்சியை காப்பாற்ற அ.தி.மு.க.வினர் மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளைப் பற்றி கண்டு கொள்வதில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதி இருப்பதாவது:-

மக்களுக்கு ஏதாவது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மாநில அரசுகள் மத்திய அரசை அணுகுவதும் இணைந்து செயல்படுவதும் சம்பந்தப்பட்ட மாநில வளர்ச்சிக்குத்தான் கைகொடுக்கும்.

அந்த வகையில் மத்திய- மாநில அரசுகள் மக்கள் நலனுக்காக இணைந்து செயல்படுவதை ஆட்சியை காப்பாற்ற மண்டியிடுவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார்.

அப்படியானால் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை அழைப்பது ஏன்? ஆட்சிக் கனவை நிறைவேற்றத்தானே? இதுவும் ஆட்சி கனவில் திருமாவளவனிடம் மண்டியிடுவதுதானே?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a comment